Skip to content

சமயபுரத்திற்கு வந்த சென்னை நபர் கார் மோதி பலி

சென்னை, வேளச்சேரி,தேவி கருமாரியம்மன் நகர் பவானி தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி்(70) இவர் திட்டக்குடியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்க்காக நேற்று இரவு 10.30 மணியளவில் வந்திருந்தார்.அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக சமயபுரத்திலுள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ் சாலையை கடக்க முயன்றார்.இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அதி வேகமாக சென்ற கார் சாலையை கடக்க முயன்ற தங்கமணி மீது மோதி விபத்துக் குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த தங்கமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!