Skip to content
Home » திருச்சியில் பல்வேறு கோரிக்கையுடன் பட்டை நாமத்துடன் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் பல்வேறு கோரிக்கையுடன் பட்டை நாமத்துடன் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என விண்ணப்பித்த வர்களுக்கு விரைந்து பணி நியமனம் வழங்க வேண்டும், கிராமப்புற இளைஞர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் பட்டை நாமம் அணிந்து இன்று தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!