Skip to content
Home » திருச்சியில் தியேட்டரில் ”வாரிசு” படத்தை பார்த்த எஸ்.ஏ சந்திரசேகர்…

திருச்சியில் தியேட்டரில் ”வாரிசு” படத்தை பார்த்த எஸ்.ஏ சந்திரசேகர்…

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் தியேட்டரில் வெளியாகியது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது.  விஜயின் வாரிசு ரிலீசானதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விஜய், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். முதல் பாதியில் அமைதியான அம்மா பாசம் கொண்ட விஜய்யையும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன், காமெடி, தந்தை பாசம் கொண்ட விஜய்யையும் பார்க்க முடிகிறது. விஜய் எப்பொழுதும் போல் மிகவும் சார்மிங்காக இருக்கிறார். நடனக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். ரசிகர்களுக்குத்

தேவைப்படும் இடங்களில் பஞ்ச் வசனங்களை சரமாரியாகத் தெறிக்கவிட்டுக் கைத்தட்டல்களை அள்ளுகிறார். ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்கச் சண்டையிட்டு ரசிகர்களை சில்லறைகள் சிதற விடச் செய்கிறார்.  இந்நிலையில் திருச்சி மேரிஸ் தியேட்டருக்கு தனது மகனின் வாரிசு படத்தை காண  தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ரசிகர்களுடன்  அமர்ந்து வாரிசு படத்தை பார்த்தார். மேலும் அவர்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!