Skip to content

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ.738 கோடி நஷ்டம்

  • by Authour

ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி கிரிக்​கெட் தொடர் சமீபத்​தில் பாகிஸ்​தானில் நடை​பெற்​றது. இந்த தொடரை நடத்​து​வதற்​காக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் லாகூர், கராச்​சி, ராவல்​பிண்டி ஆகிய 3 மைதானங்​களின் சீரமைப்பு பணிக்​காக இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.504 கோடியை செல​விட்​டிருந்​தது. இது ஏற்​கெனவே மதிப்​பிட்ட தொகை​யை​விட 50 சதவீதம் அதி​கரித்​திருந்​தது.

தொடர்ந்து போட்​டிகளை நடத்​து​வதற்​கான ஏற்​பாடு​கள் என ஒட்​டுமொத்​த​மாக ரூ.868 கோடியை பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் முதலீடு செய்​திருந்​தது. ஆனால் இது​வரை பாகிஸ்​தான் போட்​டி​யில் பங்​கேற்​றதற்கு கட்​ட​ண​மாக ரூ.52 கோடி மட்​டுமே திரும்பி வந்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளது.

டிக்​கெட் விற்​பனை, ஸ்பான்​சர்​கள் வாயி​லாக​வும் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு பெரிய அளவில் வரு​மானம் கிடைக்​க​வில்​லை. ஒட்​டுமொத்​த​மாக ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி தொடரை நடத்​தி​ய​தில் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் ரூ.738 கோடி நஷ்டம் அடைந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

error: Content is protected !!