Skip to content

“ரூ.70 கோடி போதைப்பொருள் சிக்கிய விவகாரம்- சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு”

  • by Authour

சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கை நாட்டிற்கு பெருமளவு போதை பொருள் கடத்தப்பட்ட இருப்பதாக சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்னையில் பேருந்து நிலையங்கள் விமான நிலையங்கள் ரயில் நிலையங்களில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் சென்னை அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்க்கு இடமாக வந்த ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியதில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பைசல் ரகுமான் என்பது தெரியவந்தது, அவரிடமிருந்து  ரூ.70 கோடி மதிப்பள்ள சுமார் 6 கிலோ மெத்தபெட்டமைன் என்கிற போதைப்

பொருளை  மத்திய போதை பொருள் தருக பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மன்சூர்,இப்ராஹிம் என்ற இருவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களுக்கு சொந்தமான குடோன் ஒன்றில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு 92 கிராம் பெத்தம் பெட்டமைன் என்கிற போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!