Skip to content
Home » திருச்சி எக்ஸ்பிரஸ் மீது விழுந்த பாறைகள்.. பதறிய பயணிகள்..

திருச்சி எக்ஸ்பிரஸ் மீது விழுந்த பாறைகள்.. பதறிய பயணிகள்..

  • by Senthil

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மாலை 6:15 மணி அளவில் திண்டுக்கல்லை அடுத்த கொடைரோடு-அம்பாத்துறை வழித்தடத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த வழித்தடம் மலைகளை குடைந்து அமைக்கப்பட்டது ஆகும். .அந்த வழியாக ரயில்  வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் பெட்டி மீது பாறை கற்கள் விழுந்தன. இதில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த கரூரை சேர்ந்த வினோத் என்பவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் இருக்கைகளில் இருந்து எழுந்து ஜன்னல்களை மூடினர். சத்தம் கேட்டாலும் ரயில் நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து திண்டுக்கல் ஸ்டேஷனை ரயில் அடைந்ததும் ஆர்பிஎப் போலீசாருக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டது. கற்கள் பட்டதில் காயமடைந்த வினோத்துக்கும் ரயில்வே டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் ரயில்வே போலீசார் ஆய்வு நடத்தினர். மர்ம நபர்கள் யாரேனும் மலையில் இருந்து பாறை கற்களை பெயர்த்து எடுத்து ரயில் மீது வீசியிருப்பார்களா? எனகிற சந்தேகம்  போலீசாருக்கு ஏற்பட்டுள்ளதுடது. இதையடுத்து அந்த பகுதியிலேயே போலீசார் கண்காணிப்பையும் விசாரணையையும் மேற்கொண்டுள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!