கரூர் மாவட்டம் தென்னிலை கார்வழி சுமார் 8 கிலோமீட்டர் தார் சாலை கொண்டது. இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டது அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையை சீரமைக்காமல் உள்ளது இந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது இந்த சாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாய நிலங்கள் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை அடுத்து பகுதி வாழ் மக்கள் பலமுறை கிராம நிர்வாக அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட நிர்வாகம் ஆகியவர்களிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை இந்த சாலையை விரைவில் சீரமைக்க கோரி தென்னிலை கார் விழி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் ஆய்வாளர் ஜெகன்நாத் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்