Skip to content
Home » வெயிலில் நடந்து சென்ற மக்களுக்கு குடை வழங்கிய கனிமொழி…..

வெயிலில் நடந்து சென்ற மக்களுக்கு குடை வழங்கிய கனிமொழி…..

கடுமையாக இருக்கும் கோடை வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாங்கள் அமைத்திருக்கும் தண்ணீர்ப் பந்தலில் பொது மக்களுக்கு மடக்கு குடைகள் வழங்கப்பட்டன.  தூத்துக்குடியில் வெயில் நடந்து சென்ற பொது மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி குடைகளை வழங்கினார். இந்தக் கோடைக் காலத்தில், மக்கள் அனைவரும் வெளியே

செல்கையில் தவறாமல் குடைகளை எடுத்துச் செல்லுங்கள். நிறையத் தண்ணீர் குடிக்குமாறும், எப்போதும் உடல் நீர் இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரையில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க பல்வேறு பகுதிகளில் கனிமொழி கருணாநிதி அவர்கள் சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!