Skip to content

சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி… திருச்சியில் சோகம்..

சிவகங்கை மாவட்ட ம்சிங்கம் புனரி தர்மம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகன் பாலாஜி (18) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டு ஒரு தனியார் ஒட்டலில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மன்னார்புரம் பி.என்.டி. காலனி சாலையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு டாக்டர்கள் சோதனை செய்து பார்த்தபோது பாலாஜி இறந்துவிட்டார் என தெரிய வந்தது.இந்த சம்பவம் குறித்து கன்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!