Skip to content

சாலை விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2லட்சம்….

இராமநாதபுரம் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம்: அரசு பஸ் மோதிய விபத்தில் பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் 2 பேர் பலி
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம்‌ மாவட்டம்‌, கீழக்கரை வட்டம்‌ மற்றும்‌ உள்வட்டம்‌, மாயாகுளம்‌ பகுதியில்‌ நேற்று (44-6-2023) மதியம்‌ அரசு பேருந்தும்‌, தனியார்‌ வாகனமும், எதிர்பாராத விதமாக மோதியதில்‌ கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து நிலைதடுமாறி சென்றபோது ஏற்பட்ட விபத்தில்‌ சம்பவ இடத்தில்‌ இருந்த இரண்டு பெண்கள்‌ உயிரிழந்தனர்‌ என்ற செய்தியினைக்‌ கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்‌.

உயிரிழந்தவர்களின்‌ குடுற்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலைத்‌  தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம்‌ ரூபாய்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!