திருச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆர் கே டிராவல்ஸ் பஸ் பெரம்பலூர் ஆத்தூர் செல்லும் சாலையில்சென்று கொண்டிருந்தது. அப்போது வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்ற போது நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்தானது. பஸ்சில் பயணம் செய்த 20 நபர்கள் லேசான
காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இந்த விபத்தினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது விபத்து குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.