Skip to content

உறவினர் ரூ. 20 லட்சம் மோசடி…. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

தஞ்சை . மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுப்பது வழக்கம். இந்த கூட்டத்தில் மனு கொடுக்க வருபவர்கள் அனைவரையும் வாசல் பகுதியிலேயே போலீசார் முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிப்பது வழக்கம்.

தண்ணீர் பாட்டில் எடுத்து சென்றாலும் அதை திறந்து அது தண்ணீர் தானா என பார்த்த பின்பு போலீசார் கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல அனுமதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு டிப்டாப் உடையில் வந்த வாலிபர் ஒருவர் சட்டென்று தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி கொண்டு தீ பற்ற வைக்க முயன்றார்.

இதைப் பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரது கையில் இருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை தட்டி விட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். பின்னர் போலீசார் அந்த வாலிபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் மாப்பிள்ளை நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பதும், உறவினரான கலியமூர்த்தி என்பவர் ரூ.20 லட்சம் பெற்று கொண்டு தராமல் மோசடி செய்து வருகிறார். அதனால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். பின்னர் போலீசார் அவரை தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

மிகக் கடுமையாக கலெக்டர் அலுவலக வாசல் பகுதியிலேயே போலீசார் பாதுகாப்பு மேற்கொண்டு இருக்கும்போதே வாலிபர் ஒருவர் இவ்வாறு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!