Skip to content
Home » ”ராயன்” வெற்றி…. அண்ணாமலையார் கோவிலில் நடிகர் தனுஷ் சாமிதரிசனம்….

”ராயன்” வெற்றி…. அண்ணாமலையார் கோவிலில் நடிகர் தனுஷ் சாமிதரிசனம்….

  • by Senthil

நடிகர் தனுஷ்  இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனுஷின் 50 வது திரைப்படமான ராயன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது. எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா, அபர்ணா பாலமுரளி என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள இந்தப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 26) வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷ் இயக்கிய 2வது படம் என்பதாலும், அவரது நடிப்பில் வெளியாகும் 50வது படம் என்பதாலும்,  நேற்று (ஜூலை 28) தனுஷின் பிறந்தநாள் என்பதாலும் அவரது ரசிகர்கள் ராயன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.  அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த தனுஷ்.. ருத்ராட்ச மாலையை ஏந்தி மனமுருகி வழிபாடு.. 

இந்த நிலையில் ஆடி கிருத்திகை நாளான இன்று நடிகர் தனுஷ் , தனது மகன்களுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கையில் ருத்ராட்‌ஷ மாலையை பிடித்துக்கொண்டு மனமுருகியபடி கோவிலை சுற்றி வலம் வந்து வழிபட்டார்.  தனுஷின் வருகையை அறிந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். காவல்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினரின் உதவியுடன் அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்துவிட்டு தனுஷ் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.  அண்மையில் தனுஷ் , தனது மகன்களுடன் இதேபோல் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!