திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸôருக்கு திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில், வேங்கூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பா. தினேஷ் (32) என்பவரின் வீட்டு முன்பு ஒரு வேன் நின்றுள்ளது. அதில் 30 மூட்டைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தினேஷை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 1500 கிலோ ரேசன் அரிசி மற்றும் அவற்றை பதுக்கி வைத்திருந்த வேன் உள்ளிட்டவைகளையும் போலீஸôர் பறிமுதல் செய்தனர். இதேபோல கடந்த 10ம் தேதி அரியமங்கலம் மற்றும் காட்டூர் வீதி வடகம் ஆகிய பகுதியில் சுமார் 3500 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
