Skip to content

ரேசன் கடையில் தரமற்ற ரேசன் அரிசி…. எம்எல்ஏ-விடம் குற்றசாட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்கூர்,பவித்திரம், விஸ்வநாதபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மருந்தகம் திறப்பு விழா மற்றும் தார் சாலை அமைக்கும் பணி 12 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

விஸ்வநாதபுரி பகுதியில் தார் சாலை பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏவிடம் அப்பகுதி பொதுமக்கள் நியாய விலை கடையில் அரிசி தரமற்ற முறையில் இருப்பதாக கோரிக்கை வைத்தனர். உடனடியாக கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ இளங்கோ நியாய விலை கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாப்பாடு அரிசிக்கு பதிலாக இட்லி அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை அறிந்த எம்எல்ஏ உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!