Skip to content
Home » ரேஷன் கடை ஊழியரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த விசிக நிர்வாகி…..

ரேஷன் கடை ஊழியரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த விசிக நிர்வாகி…..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கொலந்தானூர் பகுதியில் அமைந்துள்ள அம்மன் நகர் நியாய விலை கடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னால் மாவட்ட செயலாளர் பகலவன் என்ற பாஸ்கரன் என்பவர் போஸ்டர் ஓட்டுவதற்கு 5000 ரூபாய் பணம் வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு நியாய விலைக் கடை ஊழியரிடம் கேட்டதாகவும், பணம் இல்லை என்று சொல்லி ஊழியர் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு அந்த நியாய விலை கடைக்கு வந்த விசிக பிரமுகர் பகலவன் என்ற பாஸ்கரன் செருப்பு காலுடன் கடைக்குள் அத்துமீறி, அரிசி மூட்டை மேல் அமர்ந்து மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று ஊழியர் கூறியதற்கு, கையில் இருக்கும் பணத்தை கொடு என்று பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!