Skip to content
Home » ராமஜெயம் கொலை.. 4 பிரபல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்தது..

ராமஜெயம் கொலை.. 4 பிரபல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்தது..

திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என் ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி அதிகாலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி  கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கு குறித்து தற்போது, எஸ்பி.செல்வராஜ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இந்த கொலை வழக்கு தொடர்பாக, சந்தேகத்துக்குரிய தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி, திருச்சி ஜே எம்- 6 நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதில், 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, நீதிபதி சிவகுமார் அனுமதி அளித்தார். அதன்பேரில், சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் , நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதன்படி இன்று முதல் 12 ரவுடிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.. சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் இன்று பிரபல ரவுடிகள் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகிய 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரிடமும் சுமார் 40 நிமிடம் இந்த தசோதனை நடத்தப்பட்டது. டில்லியில் இருந்து வருகை தந்துள்ள தடயவியல் துறை நிபுணர்கள் இந்த சோதனையை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!