Skip to content
Home » உபியில் 121 பேர் பலி…… பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்

உபியில் 121 பேர் பலி…… பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்

 உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம்  முகுல்கடி என்ற கிராமத்தில் போலே பாபா சாமியார்  கடந்த 2 ம் தேதி   மத பிரசங்க  கூட்டம் நடத்தினார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 உயிரிழந்தனர்.  இந்த துயர சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழை) நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்.

.இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை  6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை அன்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி தொகுதி மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, இன்று (வெள்ளிக்கிழமை) ஹாத்ரஸ் வந்தார்.

அலிகரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர் சந்தித்தார்.  அவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவும் என உறுதி அளித்தார். மேலும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்றும் கேட்டு அறிந்து கொண்டார்.  இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இது குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை இரண்டு மாத காலத்துக்குள் மாநில அரசிடம் சமர்பிக்கும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!