சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் ரஜினிகாந்த் போன்ற ஆளுமை குறித்து ஒய்.எஸ்.ஆர் தலைவர்கள் கூறியுள்ள விமர்சன கருத்துகள் அனைவரையும் வேதனைக்குள்ளாக்குகிறது. என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற, ரஜினிகாந்த் அவருடனான தனது உறவை, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அரசின் போக்கை அவர் விமர்சிக்கவில்லை… யாரையும் தவறாகவும் பேசவில்லை. அவர் பல தலைப்புகளில் தனது கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் ரஜினி பேசியதற்கு ஆந்திர அமைச்சர் ரோஜா விமர்சனம் செய்திருந்தார்.
இதனைக் கண்டித்து சந்திரபாபு நாயுடு, ரஜினி மீது அதீத ஆணவத்துடன் வீண் விமர்சனம் செய்வதை தெலுங்கு மக்கள் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், வாய் கிழிய பேசும் தலைவர்களை ஜெகன் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்…. நடந்ததற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரஜினியிடம் மன்னிப்பு கேட்டு தங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.