Skip to content
Home » போன வருட பட்ஜெட்டை வாசித்த முதல்வர்.. ராஜஸ்தானில் நடந்த கூத்து..

போன வருட பட்ஜெட்டை வாசித்த முதல்வர்.. ராஜஸ்தானில் நடந்த கூத்து..

  • by Senthil

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் 2023-24ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையை  முதல்வர் அசோக் கெலாட் நேற்று காலை  தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர்கள் சிலர், முதல்வர் வாசித்து கொண்டிருந்தது பழைய நிதிநிலை அறிக்கை என்பதை கவனித்தனர். உடனே அதை முதல்வரிடம் தெரிவிக்க, அசோக் கெலாட் உரை வாசிப்பை நிறுத்திக் கொண்டார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், முதல்வரின் இந்த பொறுப்பற்ற தன்மையை கண்டித்து அவையின் மையப்பகுதியில் பாஜ உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன், தர்ணா செய்தனர்.  அவை ஒத்தி வைக்கப்பட்டு, சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் கூடியது. அப்போது பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய முதல்வர் அசோக் கெலாட், “ என்னிடம் கொடுக்கப்பட்ட உரையில் தவறுதலாக பழைய பட்ஜெட் உரையின் சில பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டன. இது மனித தவறு என்றாலும், நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!