Skip to content

கோவையில் கனமழை… மேம்பாலத்து அடியில் தஞ்சமடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..

சென்னை வானிலை மையம் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் கோவையில் காலை நேரங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது.இதனால் முதியவர்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

தற்பொழுது கோவையில் காந்திபுரம்,வடகோவை,ரயில் நிலையம்,ஒப்பணக்கார வீதி, கவுண்டம்பாளையம்,பூ மார்க்கெட், ஆர்.எஸ் புரம்,ராமநாதபுரம், சிங்காநல்லூர்,நஞ்சுண்டாபுரம், உக்கடம்,போத்தனூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அலுவலக பணிக்கு சென்ற பொதுமக்கள் வீடு திரும்பும் பகுதியில் சிரம் ஏற்பட்டு வருகிறது. மேலும் கோவை மாநகர் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அவிநாசி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கனமழை காரணமாக பாலத்திற்கு அடியில் தஞ்சம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!