Skip to content
Home » ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் முடிவு

ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் முடிவு

மக்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இதனை துவக்கி வைத்தார். இந்த நடைபயணம் 12 மாநிலங்களில் 3,500 கி.மீ., தூரத்தை 150 நாட்களில் கடந்து பிப்ரவரி முதல் வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிறைவடைய இருக்கிறது. தற்போது நடைபயணம் 110 நாட்களை தொட்டுள்ளது.
வரும் 24ம் தேதி டில்லியில் ராகுல் நடத்தும் பாதயாத்திரையில் தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்களுடன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமலின் இந்த திடீர் முடிவு குறித்து தமிழக அரசியலில் பரபரப்பான பேச்சுக்கள் தொடங்கி விட்டது. 2024 மக்களவை தேர்தல் பணியை இப்போதே கமல் தொடங்கி விட்டார். அதற்கு அச்சாரம் தான் நடைபயணம் என்கிறார்கள். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறலாம், காங்கிரசுடன், உள் ஒதுக்கீடு முறையில் சீட் வாங்கிக்கொள்ளலாம் என்றும் பேச்சு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!