Skip to content
Home » என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார்… ராகுல் காந்தி டுவிட்…

என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார்… ராகுல் காந்தி டுவிட்…

  • by Senthil

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன். என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்று இந்தியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!