Skip to content
Home » மத்திய அரசை கண்டித்து புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

மத்திய அரசை கண்டித்து புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

புதுக்கோட்டை, வடக்குராஜவீதியில்உள்ள எல்.ஐ.சி.அலுவலகம்முன்புஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை வடக்குமாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.முருகேசன் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்கள் ஹண்டன் பார்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு நாடாளுமன்ற குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். இரண்டாவதாக எல்.ஐ.சி மற்றும் எஸ். பி .ஐ மற்றும் பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை முதலீடு செய்ய

நிர்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் மற்றும் முதலீட்டாளர்களை பாதுகாக்க சரியான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் அதானி குழுமம் கடன் பெற வழங்கப்படும் சலுகைகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் நகரகாங்கிரஸ்முன்னாள்தலைவர்மேப்வீரையா,சிறுபான்மைபிரவுதீன்முகம்மது,ஜி.எஸ்.தனபதி,பழனிச்சாமி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் வட்டார நகர தலைவர் மற்றும் நிர்வாகிகள்பங்கேற்றுகோஷங்களைஎலுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!