கடந்த 2022 ஜூலையில் புதுச்சேரி டிஜிபியாக மனோஜ் குமார் லால் பொறுப்பேற்றிருந்தார். அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அவர் இடமாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் சீனிவாசன் புதுச்சேரியின் புதிய டிஜிபியாக நியமிக்கப்படடார். ஸ்ரீனிவாசன் புதிய டிஜிபியாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்
