Skip to content
Home » நந்தினி-கரிகாலன் மோதல் ஹைலைட்…… கலை அமைப்பு பிரமாதம்…..பொன்னியின் செல்வன்2 விமர்சனம்

நந்தினி-கரிகாலன் மோதல் ஹைலைட்…… கலை அமைப்பு பிரமாதம்…..பொன்னியின் செல்வன்2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் பாகம் 1  கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம்  வெளியானது. அது இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. வெளிநாடு வாழ் தமிழ் மக்களும் அங்குள்ள தியேட்டர்களில் இன்று  பொன்னியின் செல்வன் 2 பார்த்தனர்.

நடிகர்கள் ஜெயம் ரவி, வெற்றி திரையரங்கிலும் கார்த்தி, காசி திரையரங்கிலும் ஜெயராம் வடபழநி திரையரங்கிலும் ரசிகர்களுடன் ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படத்தை பார்த்தனர். அப்போது ரசிகர்கள் இவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி இல்லாததால் காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கின. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 5 மற்றும் 6 மணிக்கு முக்கிய மையங்களில் முதல் காட்சிகள் துவங்கின. அமெரிக்காவில், இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கியது. தற்போது படத்தின் முதல் விமர்சனம் டுவிட்டரில் வந்துள்ளது.

முதல் பாகத்தைப் போலவே மணிரத்னம் 2ம் பாகத்திலும் அவசரப்படாமல் கதை சொல்லியிருக்கிறார். கல்கியின் கண்ணோட்டத்திற்கு நீதி வழங்க மணிரத்னத்தின் நேர்மையான முயற்சியை படத்தில் காணலாம். என சிகே விமர்சித்துள்ளார்.

சி.கே.விமர்சனம்  மேலும் கூறுகையில், படத்தின் முதல் 15 நிமிடங்களே பிரமாதம். படத்தின் ஹைலைட் நந்தினி-கரிகாலன் மோதல். விக்ரம் அடித்தார். கார்த்தியும் ஐஸ்வர்யா ராயும் நல்லவர்கள். ஜெயம் ரவி ஆதரிக்கிறார். இசை நன்றாக செல்கிறது. சிறந்த கலை இயக்கம். மெதுவான கதைசொல்லல். சிலிர்ப்பான தருணங்கள் இல்லாவிட்டாலும், பார்க்கத் தூண்டும் திரைப்படம். ஒரு நேர்த்தியான பீரியட் டிராமா என்கிறார் சிகே.

இன்னொரு வெளிநாட்டு ரசிகர் கூறும்போது,  பொன்னியின் செல்வன் பாகம் 1ஐவிட  பிஎஸ்2 சிறப்பாக உள்ளது.  படத்தின் 2வது பாகத்தில்  இசை  நன்றாக உள்ளது. பல இடங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது , இரு விருக்கான படம்  என கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!