கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிஜேபி அரசை கண்டித்தும் தமிழகத்திற்கு வருகை தரும் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் வருகையை கண்டித்தும் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் தலைமையில் சார்பில் கட்டாய இந்தி திணிப்பு, புயல், வெள்ளம், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்காதது, நீட் தேர்வு ரத்து செய்யாதது, நூறு நாள் வேலைவாய்ப்பு, மெட்ரோ, கல்வி நிதி உட்பட தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ.4,034 கோடி தராமல் தமிழகத்திற்கு வருகை தரும் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் வருகையை கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.