Skip to content
Home » திருச்சி ஸ்பாவில் விபசாரம்…2 எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்…கமிஷனர் அதிரடி

திருச்சி ஸ்பாவில் விபசாரம்…2 எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்…கமிஷனர் அதிரடி

திருச்சி கண்டோன்மெண்ட்  பகுதியில் உள்ள ஒரு ஸ்பாவில் விபசாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த ஸ்பாவின் மேலாளர் கைது செய்யப்பட்டதுடன்,  அங்கிருந்த 3 பெண்களும் மீட்கப்பட்டனர். ஏற்கனவே அந்த ஸ்பாவின் மீது புகார் எழுந்த நிலையில், விபசார தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் திருச்சி கமிஷனர் சத்திய பிரியா விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த  சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பால சரஸ்வதி, ராஜ்மோகன் மற்றும் டிரைவர் அத்தாலி ஆகிய 3 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!