Skip to content

வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

ராகுல் காந்தி ராஜினாமா செய்த கேரள மாநிலம் வயநாடு  மக்களவை தொகுதியில்  வரும் நவம்பர் 13 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்யிடுவார் என்று அக்கட்சி தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டது.பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும் போட்டியிடுகிறார்கள்.

நாளை ( புதன்கிழமை)  காலை 11 மணி அளவில் பிரியங்கா காந்தி வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி கல்பெட்டாவில் இருந்து கலெக்டர் அலுவகம் முன்பு வரை ரோடு ஷோ (வாகன அணிவகுப்பு) நடைபெறுகிறது. இதில் பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும்  கலந்து கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!