Skip to content

ஜனாதிபதி திரவுபதி முர்மு 18ம் தேதி மதுரை, கோவை வருகை…

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18ம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளார். தனி விமானத்தில் டெல்லியில் இருந்து மதுரைக்கு வருகை தர உள்ளார். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பின்னர் கோவை செல்கிறார். கோவை ஈஷா யோகா மையத்தில் நடத்தப்பட உள்ள மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!