Skip to content

பொதுக்குழு கூட்டம்…….தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு

  • by Authour

தேமுதிக பொதுக்குழு, செயற்குழு  கூட்டம் இன்று சென்னை திருவேற்காட்டில்  நடந்தது.  கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஜயகாந்த்,  பொருளாளர்  பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்.   கூட்டத்தில் விஜயகாந்த்  உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இதில் பிரேமலதாவை பொதுச்செயலாளராக நியமிப்பது என்று கூட்டத்தில் தீர்மானம்

நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரேமலதா, விஜயகாந்த் காலைத் தொட்டு கும்பிட்டு ஆசிபெற்றார்.    அவருக்கு பிரமாண்ட மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய விஜயகாந்த்துக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!