சென்னை புளியந்தோப்பு பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கஞ்சாமணி எனும் தீனதயாளன் (26). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது புளியந்தோப்பு, ஐசிஎப், வடபழனி, பேசின் பிரிட்ஜ், உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி, போதைப்பொருள் விற்பனை உட்பட 9 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கஞ்சா மணி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் புளியந்தோப்பு போலீஸாசார் கஞ்சா மணி உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து சஞ்சய் மற்றும் பிரபுவை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே சென்னையில் போதை ஊசி செலுத்தி 5க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தற்போது சரித்திர பதிவேடு குற்றவாளி ஓருவர் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.