Skip to content
Home » மோடிக்கு எதிராக போஸ்டர்… குஜராத்தில் 8 பேர் கைது

மோடிக்கு எதிராக போஸ்டர்… குஜராத்தில் 8 பேர் கைது

  • by Senthil

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் “மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ” (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற முழக்கங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சட்டவிரோதமாக ஒட்டப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், நட்வர பாய் போபட் பாய், ஜட்டின் பாய், சந்திரகாந்த் பாய் பாட்டீல், குல்தீப் சரத்குமார் பாட், ரவிந்தர பாய் சர்மா, அஜய் சுரேஷ் பாய் சவுகான், அரவிந்த் கோர்ஜிபாய் சவுகான், ஜீவன் பாய் வசுபாய் மகேஷ்வரி, பர்தேஷ் வசுதேவ்பாய் துல்சியா  ஆவார்கள்.

இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் இசுதன் காத்வி கூறுகையில், “கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை, போலீசாருக்கு பாஜக மீதுள்ள பயத்தைக் காட்டுகிறது’ என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!