Skip to content

மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை…

  • by Authour

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ 15.83 கோடி மதிப்பீட்டில் தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை யில் நியூ டவுன், ராஜீவ் காந்தி நகர், எஸ்.பி.ஜெ நகரில் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடைப் பெற்றது. அய்யம் பேட்டை நியூ டவுனில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். முன்னதாக திமுக அய்யம் பேட்டை பேரூர் செயலர் துளசி அய்யா வரவேற்றார். இதில் திமுக மாவட்ட துணைச் செயலர் அய்யா ராசு, ஒன்றியச் செயலர்கள் வடக்கு தாமரைச் செல்வன், தெற்கு நாசர், பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டினை அய்யம் பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் செய்திருந்தார். பட விளக்கம்: அய்யம் பேட்டையில் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!