கடந்த 2006-11 காலகட்டத்தில் பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டது.
