Skip to content

திருச்சி பொன்மலை பாலம் சேதம்….. சீரமைக்க 1 மாதம் ஆகும்….. கலெக்டர் தகவல்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை  அருகே  ரயில்வே மேம்பாலத்தின்  ஒரு பக்க சுவர் சரிந்ததால் அந்த பாலத்தின் வழியாக கனரக வாகன போக்குவரத்து  தடை செய்யப்பட்டுள்ளது.  இதனால் அந்த 4 வழிச்சாலையின்  ஒரு பகுதியில்  இருவழி போக்குவரத்து பாதையாக மாற்றப்பட்டுள்ளதால்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாலத்தின் சேதம் குறித்து திருச்சி என்ஐடி நிபுணர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். அந்த அறிக்கை இன்று  அரசுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில்  அமைச்சர் மகேஸ், கலெக்டர் பிரதீப் குமார் இன்று சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்தனர். பாலம் பெரிய அளவில் சேதம் அடைந்ததால்  அதனை சீரமைக்க ஒரு மாதம்ஆகும் என  கலெக்டர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!