Skip to content

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்….

  • by Authour

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாள், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு,பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொத்து கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்” என கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகம் இழந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் களை கட்டியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் திருநாளை ஒட்டி, பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நாளை மாட்டு பொங்கல், நாளைமறுநாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!