Skip to content
Home » பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வாடகை பாத்திர கடையில் திடீர் தீ விபத்து..

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வாடகை பாத்திர கடையில் திடீர் தீ விபத்து..

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான கஸ்தூரிராஜா. வால்பாறை ரோடு பகுதியில் ஆழியார் தபால் நிலையம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது.இங்கு கஸ்தூரிராஜா வாடகைக்கு கடை எடுத்து வாடகை பாத்திர கடை ஒன்றை கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகிறார்.இந்த கடையில் நாகராஜ் என்னும் நபர் இரவு தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் நாகராஜ் வழக்கம் போல கடைக்குள் உறங்கியுள்ளார். சுமார் ஒரு மணி அளவில் கடைக்குள் உள்ளே பிளாஸ்டிக்

சேர்கள் தீப்பிடித்து எரிவதை பார்த்த நாகராஜ் வெளியே வந்து அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். மேலும் தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் கடையிலிருந்து அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பல் ஆனது.இது குறித்து ஆழியார் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நள்ளிரவில் ஆழியார் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!