Skip to content
Home » பொள்ளாச்சி அருகே… தோட்டத்தில் பிடிப்பட்ட 11 அடி நீள மலைப்பாம்பு….

பொள்ளாச்சி அருகே… தோட்டத்தில் பிடிப்பட்ட 11 அடி நீள மலைப்பாம்பு….

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல இன்று தோட்டத்தில் இறங்கி வேலை செய்து வந்தனர். அப்போது தோட்டத்தில் ஒரு பகுதியில் உள்ள தென்னை மரத்தின் சோகையை அகற்றியபோது அதிலிருந்து மலை பாம்பு ஒன்று தென்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டர்னர்

இது குறித்து தோட்டத்து உரிமையாளர் சுப்பிரமணியன் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தோட்டத்தில் இருந்த சுமார் 11 அடி நீளம் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்புபை பத்திரமாக ஆழியார் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!