தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் வண்ணம் ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் மும்மொழி கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் எனக் கூறி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தியும், தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை தர மறுத்துள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
இந்நிலையில் கோவை பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் உள்ள ஊர் பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழியில் பொள்ளாச்சி என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று காலை பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் இணைந்து ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் கருப்பு பெயிண்ட் மூலம் பொள்ளாச்சி என ஹிந்தியில் எழுதி இருந்ததை அழித்தனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ரயில்வே போலீசாரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நிலையில் தற்போது இந்த சம்பவம் நடைபெறும் போது மொத்த பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு ஒரு போலீசார் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.