ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை மீண்டும் பிடிக்க சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக பல்வேறு வியூகங்களை இரு கட்சிகளும் வகுத்து வருகின்றன. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தையையும் இரு கட்சிகளும் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஆந்திர முதல் மந்திரியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். டில்லியில் நாடாளுமன்றத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி குறித்தும், சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்பது குறித்தும் ஜெகன் மோகன் ரெட்டி பேசியிருக்கலாம் என தெரிகிறது.
நேற்று சந்திரபாபு நாயுடு டில்லியில் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். இந்த நி்லையில் இன்நு ஜெகன் பிரதமரை சந்தித்து பேசியதால் ஆந்திர அரசியலும் சூடு பிடித்து உள்ளது. இந்த நிலையில் தான் ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவுக்கு இன்று பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.