Skip to content

கரூர் விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் ரெய்டு

  • by Authour

ரூ. 100 கோடி ரூபாய் சொத்து பறிப்பு, ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகளங  தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்த நி்லையில் விஜயபாஸ்கரின் தம்பி சேகரின், மைத்துனர் மணி என்பவருக்கு சொந்தமான வீட்டில்

சிபிசிஐடி போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர்.

கரூர், வெள்ளியணை அடுத்த முஷ்டகிணத்துப்பட்டியில் உள்ள பஞ்சாயத்து காண்ட்ராக்டராக இருக்கிறார் மணி – இவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் சிபிசிஐடி போலீசார் சுமார் அரை மணி நேரம் மட்டுமே சோதனை நடத்தி விட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!