Skip to content
Home » கோவை கல்லூரி மாணவர்களிடம் போலீஸ் ரெய்டு…… கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்….

கோவை கல்லூரி மாணவர்களிடம் போலீஸ் ரெய்டு…… கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்….

சென்னை அருகே கல்லூரி விடுதியிலும், வெளியில் மாணவ, மாணவிகள் தங்கியிருக்கும் வீடுகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை பொருட்களை கைப்பற்றினர். இந்த நிலையில்  கோவையிலும் இன்று  கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் சரவணம்பட்டி, பீளமேடு, குனியமுத்தூர் உள்ளிட்ட  பல பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனால்  போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாநகரத்தில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அடுத்த கட்டமாக  திருச்சி, சேலம் உள்பட பல இடங்களிலும் மாணவர்கள் அறை எடுத்து தங்கி உள்ள இடங்களில்  சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!