Skip to content

பழி, பொய் சொன்னவர்கள் வாழ்க…… வைரமுத்து கவிதை

பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தின் மூலமாக 1980ம் ஆண்டு திரை உலகில் நுழைந்த வைரமுத்து, ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது…’ என்ற பாடல் மூலம் தனது வைர வரிகளால் தமிழை பட்டை தீட்டத் தொடங்கினார். 43 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதையில் கோலோச்சும் வைரமுத்து, 7 முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில்  சமீபகாலமாக இவரது பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.  இசை பெரிதா, மொழி பெரிதா என்ற கருத்தில் இவர் பேசிய பேச்சுக்கு இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் எதிர்வினையாற்றினார்.  அதன் பிறகும் அவர் எனக்காக மக்கள் பேசுகிறார்கள் என  ஒரு கவிதை வெளியிட்டார். ஒருவாரமாக வாய் திறக்காமல் இருந்த வைரமுத்து இப்போது மீண்டும் கவிதை வெளியிட்டு  பிரச்னைக்கு   சிவப்பு கம்பளம் விரித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கவிதை  ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,’பழித்தாரும் வாழ்க, என்னைப் பகைத்தாரும் வாழ்க. மன்றில் இழித்தாரும் வாழ்க, வாழ்வில் இல்லாத பொய்மை கூட்டிச் சுழித்தாரும் வாழ்க. என்னைச் சுற்றிய வெற்றி வாய்ப்பைக் கழித்தாரும் வாழ்க. நானோ காலம்போல் கடந்து செல்வேன். இவ்வாறு  அதில்  கூறி உள்ளார்.

தன்னை ஏசியவர்கள் , பகைத்தவர்கள் வாழ்க,  நான் காலம் போல கடந்து  செல்வேன்  என்று  அதில் கூறி உள்ளார். இதற்கு யாரும்  எதிர்வினையாற்றுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!