Skip to content
Home » ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. விசாரணையின்போது, ஜாமீன் என்பது விதி.. சிறை என்பது விதிவிலக்கு என்ற பொதுவான சட்டக் கொள்கை PMLA சட்டத்திற்கும் பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், ஜாமீன்வழங்குவது இரட்டை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மட்டுமே பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (PMLA) கூறப்பட்டுள்ளது. ஜாமீன் என்பது விதி என்ற அடிப்படைக் கொள்கையை அது மாற்றாது. தண்டனைக்கு முன் சிறை தண்டனை என்பது ஒரு விதிவிலக்கே.

PMLA சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் கூட பொதுவாக ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி என நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்ததுடன், பிரேம் பிரகாஷ்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

டில்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வழக்கின்போது தனிநபரின் சுதந்திரம் எப்பொழுதும் விதி மற்றும் சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின் மூலம்அதை மறுப்பது விதிவிலக்காகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!