Skip to content
Home » தமிழகத்தில் நாளை பிரதமர் மோடி பிரச்சாரம்.. பாண்டி பஜார் சாலையில் ‘ரோடு ஷோ’…

தமிழகத்தில் நாளை பிரதமர் மோடி பிரச்சாரம்.. பாண்டி பஜார் சாலையில் ‘ரோடு ஷோ’…

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அவர் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 9, 10, 13, 14-ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை உத்தரபிரதேசம் மாநில பிலிபிட் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2.45 மணிக்கு கேரளா மாநிலம் பாலக்காடுவுக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு மாலை 6.30 மணிக்கு வருகிறார். சென்னை பாண்டிபஜார் ரோட்டில் நடைபெறும் ரோட் ஷோவில் பங்கேற்று, பா.ஜனதா சார்பில் போட்டியிடும் தென் சென்னை சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். அன்றைய தினம் இரவு சென்னை கிண்டி ராஜ்பவனில் தங்குகிறார். அதற்கு மறுநாள் சென்னையில் இருந்து வேலூருக்கு காலை 10.30 மணிக்கு சென்றடைகிறார். அங்கு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிற்பகல் 1.45 மணிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி தொகுதி பா.ஜனதா வேட்பாளரான எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறார். அங்கு பிரசாரத்தை முடித்த பின்னர், மராட்டிய மாநிலத்துக்கு மாலை 6 மாநிலத்திற்கு விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்.  இது மட்டுமல்லாது  13-ம் தேதி பெரம்பலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், 14-ம் தேதி விருதுநகரில் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரையும் ஆதரித்து பேசுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!