பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென். 100 வயதை அடைந்த அவர் உடல் நலக்குறைவால் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனிறிஹீரா பென் உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து தாயாரின் உடலை பிரதமர் மோடி தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு வந்தார். அங்கு அவர் தாயார் உடலுக்கு மலர்வளையும் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்டு இருந்த நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.