Skip to content

பிரதமர் மோடி தமிழகம் வருகை எப்போது? அண்ணாமலை புதிய தகவல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்  வருகிற 25ம் தேதி  பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வந்தது. இதில் பிரதமர்  மோடி  கலந்து கொள்வதாகவும் இருந்தது. அதற்குள் தமிழகத்தில்  பாஜக தலைமையில் ஒரு கூட்டணியை  அமைத்து அதில் கூட்டணி தலைவர்களையும் கலந்து கொள்ளச் செய்து கூட்டத்தை  பிரமாண்டமாக நடத்த  திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இப்போது பிரதமர் மோடி வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.  அதாவது  பிரதமர் வருகை  25ம் தேி இல்லை. தள்ளிப்போகலாம் என்ற வகையில்  அண்ணாமலை கருத்து தெரிவித்து உள்ளார்.   அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே  பிரதமர் வருகை மேலும் தள்ளிப்போகலாம் என தெரிகிறது. அதற்குள் கூட்டணியை ஒழுங்குபடுத்திவிட பாஜக நடவடிக்கையில் குதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!