Skip to content
Home » தொடர்ந்து 3வது முறை என்பது ஒரு வரலாற்று சாதனை.. பிரதமர் மோடி பெருமிதம்

தொடர்ந்து 3வது முறை என்பது ஒரு வரலாற்று சாதனை.. பிரதமர் மோடி பெருமிதம்

லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருந்த போது நேற்று இரவு டில்லி பா.ஜ தலைமை அலுவலகத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வாணவேடிக்கை முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டில்லி கட்சி தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்,’ ஜெய் ஜெகநாத். 1962க்குப் பிறகு, இப்போதுதான் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜ மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முடிவுகள் மக்களின் வெற்றி, ஜனநாயகம் மற்றும் நாட்டின் அரசியல் சாசனத்தின் மீதான நம்பிக்கை. ஒடிசாவில் முதல் முறையாக பா.ஜ ஆட்சி அமைக்க மக்கள் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

கேரளாவில் முதல்முறையாக பா.ஜ வெற்றி பெற்றுள்ளது. அங்கு பா.ஜ வெற்றிக்காக பல தொண்டர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலும், பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. உலகின் மிகப்பெரிய தேர்தலை மிகவும் திறமையாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி’ என்று மோடி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் இருந்தனர். பின்னணியில் உருது உட்பட பல மொழிகளில் ‘நன்றி இந்தியா’ என்று எழுதப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!