Skip to content
Home » அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3வது முறையாக போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு  நடைபெறுகிறது. இதற்காக வாரணாசி நகரில் பிரதமர் மோடி நேற்று வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை  பிரதமர் மோடி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அபிஜித் முகூர்த்தம் என்ற  முகூர்த்த நேரத்தில்( பகல் 12 மணி முதல் 1 மணிக்குள்) பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமரின் வேட்புமனுவை 4 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர். பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்தபோது மத்திய மந்திரிகள் அமித்ஷா,ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர், அதன் பின்னர் மீண்டும் வாகன பேரணியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாஜகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மோடி வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த ஜிகே வாசன், அன்புமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!